Sunday, May 31, 2015

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 71வது பட்டமளிப்பு விழா (படங்கள்)


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 152ம் ஆண்டு விழா 71வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

ஜாமிஆ தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது  தலைமை தாங்கினார் ஜாமிஆ செயலாளர் அப்துல் சமது  வரவேற்றார்.

வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி முன்னாள் முதல்வர் அல்லாமா ஜைனுல் ஆபீதீன் ஹள்ரத், சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத், ஆயங்குடி மவுலவி ஜாபர் அலி ஹள்ரத், ஜாமிஆ பேராசிரியர் அப்துஸ் ஸமது ஹள்ரத்,  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள்.

தவ்ரத்துல் ஹதீஸ் மவ்லவி ஃபாஜில், மவ்லவி ஆலிம், ஹாஃபிழ்  ஆகியோருக்கு  ஜாமிஆ முதல்வர் மவுலவி நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். ஜாமிஆ பொருளாளர் சார்பில் காசிம் ஹள்ரத்  நன்றி கூரினார்.

இறுதியாக ஜாமிஆ மூத்த பேராசிரியர் மவுலவி அப்துர் ரப் ஹள்ரத் துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.















நன்றி: லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

Tuesday, May 19, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா

தொடர்ந்து பதினொறாவது ஆண்டாக பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் நடைபெறும் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், சிறார்களின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சியும் மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. 

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி நிர்வாகி கலிமா K. ஷேக் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் Dr. M.S. முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் M. ஹமீத் அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகள் I. இஸ்மாயில் மரைக்காயர், M.S அலி அக்பர், H.M.H. ஹனீஃபா ஆகியோர் முன்னிலை வகிக்க, தவ்லத் நிஸா அரபிக்கல்லூரி நிர்வாகி S.O சையத் ஆரிஃப் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சில புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு...








படங்கள்: ஷேக் ஆதம்

Wednesday, April 29, 2015

போக்குவரத்திற்கு தயாராகும் பக்கிங்ஹாம் கால்வாய்

சென்னை - ஆந்திரத்தை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகுப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளாதாகவும், அதை மேற்கொள்வதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியத் தொழில் நிறுவன கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை (07.04.2015) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்

பக்கிங்ஹாம் கால்வாய் தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். 

இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. 1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோ மீட்டர்கள்.

இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. 

சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. 2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியது. 

தற்போது யாருக்கும், எதற்கும் உபயோகம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. 

எனவே, மீண்டும் பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப்பாதை திட்டம் மேம்படுத்தப்பட்டால் போக்குவரத்தில் தமிழகம் மிகச்சிறப்பான இடத்தை பெறும். இலட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். 

நமது அரசு செய்யுமா? 

என்ற கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு 23/12/2014 அன்று கோரிக்கை வைத்தேன் (எண்: 2014/812990/CR). 06.01.2015 அன்று பதில் வந்தது.

வந்த பதில்: 

The scheme for utilising the Buckingham canal as on inland water ways is under the consideration of the National Inland Waterway Authority and the same would be implemented in due course. Petitioner informed vide EIC WRD PWD Chepauk ch-5 lr.no.S7/CMP/CR/2014 dt 05.01.15.

Tuesday, April 28, 2015

மீராப்பள்ளியில் தொடங்கியது நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்! (படங்கள்)

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் திங்கள் கிழமை (27.04.2015) தொடங்கின. பதினொறாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் முதல் நாள் அன்று 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

ஆண் பிள்ளைகளுக்கும், 9 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.

இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.  










படங்கள்:  ஜஃபர் அலீ மன்பயீ & ஷேக் ஆதம் மழாஹிரி

Wednesday, April 22, 2015

கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்; ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 27, 2015) தொடங்க இருப்பதாக அதன் நிர்வாகிகள் கூறினர். 

11வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் கடந்த வருடங்களை போன்று இவ்வருடமும் அதிகமான பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆண் பிள்ளைகளுக்கும், 5ம் வகுப்பு வரை படிக்கும் பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியிலும், காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.

இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர். 

Tuesday, April 21, 2015

சிதம்பரத்தில் மாபெரும் மாநில மாநாடு; தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாடு

18117_83
வரும் ஏப்ரல் 25  சனிக்கிழமை  காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை சிதம்பரத்தில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மாநில மீலாது மாநாடு நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மாநில மீலாது மாநாடு

இடம்: ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரழி) நினைவரங்கம், ஈத்கா திடல், சிதம்பரம், கடலூர் மாவட்டம்

நாள்: 25.04.2015 சனிக்கிழமை இன்ஷா அல்லாஹ்....

சமூக நல்லிணக்க அரங்கம் - நேரம்: காலை 9:00 மணி முதல் நண்பகல் 1:00 மணி வரை

ஆய்வரங்கம் - நேரம்: பகல் 3:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

ஷரீஅத் அரங்கம் - நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:30 மணி வரை

சிறப்பு அமர்வுகள் - இடம்: M.Y.M. ஃபைஸல் மஹால், சிதம்பரம்

மகளிர் அரங்கம் (பெண்களுக்கு மட்டும்) - நாள்: 24.04.2015 வெள்ளிக்கிழமை - நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

ஆலிம்கள் அரங்கம் (ஆலிம்களுக்கு மட்டும்) - நாள்: 25.04.2015 சனிக்கிழமை - நேரம்: பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தமிழகத்தின் தலை சிறந்த மதிப்பிற்குரிய ஆலிம் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றுகின்றனர்.

அனைவரும் குடும்பத்துடன் வருக...! அன்பர்களையும் அழைத்து வருக...!! அல்லாஹ்வின் அளவிலா அருள்மழையில் நனைக....!!!
11080418_8350
 
11082505_8350025
 
அதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.
 
IMG-20150421-WA0005 
 
IMG-20150421-WA0006
 
IMG-20150421-WA0007
 
IMG-20150421-WA0004
 
புகைப்படங்கள் உதவி: லால்பேட்டை இணையதளங்கள் 

Tuesday, November 22, 2011

K-Tic: குவைத்தில் முப்பெரும் விழா! அரசு விருந்தினராக சூளைமேடு அப்துல்லாஹ் பாகவீ பங்கேற்பு!!

குவைத்தில் முப்பெரும் விழா!
குவைத் அரசு சிறப்பு விருந்தினராக சென்னை, சூளைமேடு மவ்லானா அப்துல்லாஹ் பாகவீ பங்கேற்பு!!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
-------------------------------------------------
ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி!
கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
சங்கத்தின் 7ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

கடந்த ஆறு வருடங்களுக்கும் முன் ஹிஜ்ரீ 1427 / இஸ்லாமியப் புத்தாண்டு துவங்கும் முஹர்ரம் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் ஒரே சிறந்த பேரியக்கமான K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் துவக்க நிகழ்ச்சியை ஹிஜ்ரா நிகழ்ச்சியுடன் சேர்த்து கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் இணைத்துமுப்பெரும் விழாவாக நடத்திக் கொண்டு வருகின்றது.

அந்த அடிப்படையில் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)'ஏற்பாடு செய்யும் (1) ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி (2) கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (3) சங்கத்தின் 7ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி ஆகிய 'முப்பெரும் விழா', நான்கு நாட்கள் மூன்று இடங்களில் ஐந்து நிகழ்ச்சிகளாக குவைத் அவ்காஃப்/ இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...

சங்கத்தின் தலைவர் விஸ்வகுடி மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் தமிழகத்திலிருந்து வருகை தரும் மலேஷியா, கோலாலம்பூர் மஸ்ஜிதே இந்தியாவின் முன்னாள் இமாமும், பன்னூல் ஆசிரியரும், ீரிய சிந்தனையாளருமான சென்னை, சூளைமேடு மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ேராசிரியர் மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் குவைத் அவ்காஃப்/ இஸ்லாமி விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

முதல் நிகழ்ச்சி:

01.12.2011 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் 'ஹிஜ்ரா - முழுமையான வரலாறும், படிப்பினைகளும், பாடங்களும்....' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் நிகழ்ச்சி:

02.12.2011 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'ஜகாத் - நோக்கங்களும், தற்கால நடைமுறைகளும், பைத்துல் மாலின் (பொது நிதி கருவூலம்) முக்கியத்துவமும்...' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.

மூன்றாம் நிகழ்ச்சி:

02.12.2011 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில் உள்ள)' பள்ளிவாசலில் 'கல்வியும், ஒழுக்கம் சார்ந்த நெறிகளும், மார்க்கக் கல்வியின் முக்கியத்துவமும்....' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி கல்வி / சமூக விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்காம் நிகழ்ச்சி:

08.12.2011 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் - இஸ்லாமியக் குடும்பவியல்' என்ற தலைப்பில் ிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாம் நிகழ்ச்சி:

09.12.2011 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'உளத்தூய்மை, மரண சிந்தனை, மண்ணறை வாழ்க்கை, மறுமை வெற்றி' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.

இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் குவைத் வாழ் தமிழ் உலம பெருமக்கள், பேராசிரியர்கள் ற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாழ்த்துரைகளையும், சிற்றுரைகளையும் வழங்க இருக்கின்றனர். துஆவுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவுபெறும் இன்ஷா அல்லாஹ்.

இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிற சமய சகோதரர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ெய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ளப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

குறிப்பு:
  • நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும்.
  • அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
  • 08.12.2011 வியாழக்கிழமை அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மட்டும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும்,ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்கத்தின் நிர்வாகிகள்.
  • குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
அனைவரும் குடும்பத்துடன் வருக! அன்பர்களையும் அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் பெ(ப)ருக!!!

உலக மக்கள் அனைவருக்கும் K-Ticன் இதயங்கனிந்த ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!



மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்: www.k-tic.com